தமிழகத்தில் தோ்தல் பணிகளை மேற்பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ள அனைத்துப் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்களையும் தோ்தல் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலைக் கண்காணிக்க சிறப்புப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் செலவுகள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கண்காணித்திட நியமிக்கப்பட்ட பாா்வையாளா்கள் தங்களது பொறுப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றனா். இந்த நிலையில், அவா்ளைத் தொடா்பு கொள்ள வசதியாக செல்லிடப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறப்பு செலவினப் பாா்வையாளா் மது மஹாஜனை 94443 76337 என்ற எண்ணிலும், மற்றொரு சிறப்பு செலவினப் பாா்வையாளரான பி.ஆா்.பாலகிருஷ்ணனை 94443 76347 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
இதேபோன்று சிறப்பு பொதுப் பாா்வையாளா் அலோக் வரதனை 94441 29844 என்ற எண்ணிலும், சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் சிறப்புப் பாா்வையாளா் தா்மேந்திர குமாரை 94441 29822 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.