திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை:  யுவராஜா தாக்கு 

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர்  மற்றும் மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை
திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை

ஈரோடு: திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர்  மற்றும் மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமாகாவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமாகா சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நான் போட்டியிடுகிறேன். அத்தொகுதியில் பெருவாரியான அதிமுக மற்றும் தமாகாவினர் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள்.

அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். முதல்வர் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1,500, வருடத்திற்கு ஆறு சமயைல் எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.     அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து செயல்படுத்தினார். எனவே,அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயலாகும். ஏற்கனவே பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. அதையே மீண்டும் சொல்வது போல திமுகழகத்தின் அறிக்கை உள்ளது. மக்களை ஏமாற்ற முடியாது. அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக உள்ளது எனவே சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று யுவராஜா கூறினார்.

அதிமுக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ தென்னரசு முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் தமாக மாவட்ட தலைவர் விஜயகுமார் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com