தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் தாக்கல் செய்தார்.
அப்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
மாற்று வேட்பாளராக திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் மனுத் தாக்கல் செய்தார்.