காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 22-ஆம் தேதி முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 22-ஆம் தேதி முதல் மாா்ச் 25 -ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், சிற்றாறு, பேச்சிப்பாறை, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.