அதிமுக பாஜகவின் பினாமி ஆட்சியாக உள்ளது: திருச்சியில் கனிமொழி பேச்சு

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி, திருச்சி பொன்மலைப்பட்டி மற்றும் குண்டூர் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 
அதிமுக பாஜகவின் பினாமி ஆட்சியாக உள்ளது: திருச்சியில் கனிமொழி பேச்சு

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி, திருச்சி பொன்மலைப்பட்டி மற்றும் குண்டூர் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது அவர் பேசியதாவது, 

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், ஆட்சிப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதைக் காட்டிலும் தமிழகத்தில் சுயமரியாதையும் மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். தமிழ் மொழியையும் சமூகநீதியையும் மீட்டெடுக்க வேண்டும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். அதிமுக பாஜகவின் பினாமி ஆட்சியாக உள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்ததோடு நாடாளுமன்றத்தில், திமுக எம்பிகள் வாக்குப்பதிவு செய்ததாகவும், ஆனால் தமிழக முதல்வர் ஆதரித்ததோடு அதிமுக எம்பிக்கள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். தற்போது தேர்தல் வந்துவிட்டதால் அதை ரத்து செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் அதிமுக அறிவித்துள்ளது.

அதேபோல் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்துக்கும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதையும் நீக்குவதற்கு அழுத்தம் தரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நம்மை கார்ப்பரேட்டிடம் அடமானம் வைத்து விடுவார்கள். ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்வதில்லை. அதனால் முத்திரை வைப்பதாகவும் அதில் பாதி பொருள்கள் கிடைப்பதில்லை என்றும், அப்படியே கிடைக்கும் மண்ணெண்ணெய், சர்க்கரை பொருள்களின் அளவு குறைவாகவும், மிக மோசமாகவும் உள்ளது. விவசாய சட்டம் வந்தால் நியாய விலை கடைகளில் கிடைப்பது கிடைக்காது மேலும் பாதுகாப்பான பொருள்களான எண்ணெய், ராகி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் இந்த சட்டத்தின் மூலம் பதுக்கி வைத்துக் கொள்வார்கள்.

தன்னை முதல்வராகியக்கியவரையும் மதிக்கவில்லை தன்னை அமைச்சர் ஆக்கிய ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் எனக் கேள்வி கேட்டதற்காக விசாரணை கமிசன் அமைத்தனர் ஆனால் அந்த கமிஷன் அப்படியே இருக்கிறது. ஜெயலலிதா இறப்பின் உண்மை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் தண்டிக்கப்படுவார்கள்.
அதிமுகவின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்போலீஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.

எனது தொகுதியான தூத்துக்குடியில் போராடிய 13 பேரைக் கொன்றவர்கள், அதைப்பற்றி எனவும் கூறினர்.  தமிழகம் ஊழலில்தான் முன்மாதிரியாக உள்ளது. சாலை, மாஸ்க், பல்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.1300-க்கு வாங்க வேண்டிய எல்இடி பல்பு ரூ 6,000  கொடுத்து வாங்கியதாகக் கணக்கு எழுதி உள்ளனர். ஓடாத காற்றாலை மூலம் மின்சாரம் வாங்கியதாக கணக்கு உள்ளது.
அதேபோல் ஆறு குளங்களை தூர்வாராமல் வாரிவிட்டதாகக் கூறுகின்றனர். முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை பெண்கள் உதவித்தொகையைப் பாதியில் நிறுத்தி விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு ஆயிரத்து 500ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் பெண்களின் உரிமை தொகை என மாதம் 1000 ரூபாய் ரேஷன் கார்டுகளில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும். கருணாநிதி மகன் அவரைப் போலவே சொன்னதைச் செய்வார் எனவே ஸ்டாலின் முதல்வராவதற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். 

நகரப் பேருந்துகள் பயணிப்பதற்கு கட்டணம் கிடையாது. என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது எரிவாயுவுக்கு மானியம் போடுவதாக கூறினர் ஆனால் அந்த மானியம் வரவில்லை. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்கப்படும். சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை திமுக ஆட்சிக்கு வந்ததும் அது செயல்பட தொடங்கும். மானியத்துடன் கூடிய சுழல் நிதி வழங்கப்படும்.

அதேபோல் ஆண்களும் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 5 சவரன் வரை அடகு வைத்து இருந்தால் அந்த கடன் தொகையை ரத்து செய்யப்படும். தலைவர் கலைஞர் 7000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ததுபோல் தளபதியும் செய்வார்.  வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக தமிழகத்தின் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.  இதில் 75 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்த ஆண் பெண்களுக்குத் தான் வேலைகள் வழங்கப்படும்.

பொன்மலை பணிமனையில் 80 சதவீதம் மற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டம் நடத்தினார்.
மேலும் தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் எனக் கூறியிருப்பது மத்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக. மேலும் மின்சாரத் துறையில் வெளி மாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருவதால் நமது உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

பாஜக தனது வேட்பாளர் பட்டியலில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்கள் இந்தியைத் திணிக்கப் பார்ப்பது புரியும். அதை எதிர்ப்பதற்கு அதிமுக அரசுக்கு முதுகெலும்பு இல்லை.  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படும். அதேபோல் இந்த தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி குமார் இதுவரை எதுவுமே செய்ததில்லை.

அப்போதைய முதல்வர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்று கூறினார் ஆனால் அது அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் திருவெறும்பூர் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் தான் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் தாலுகா அலுவலகம், டைடல் பார்க், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அண்ணாமலை பல்கலைகழகம், ஐடிஐ, ஐஏஎம், நவல்பட்டில் சமத்துவபுரம், எஸ்சி மற்றும் பி சி மாணவர்கள் தங்கும் விடுதி என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில்  எம்எல்ஏவாக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி வளர்ச்சி நிதியில் எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்குப் போராடித்தான் செய்ய வேண்டியுள்ளது. 

மேலும் இந்த பகுதியில் ஓர் போர்வெல்லுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்து உள்ளார். உங்கள் பிரச்னைகளை தீர்க்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அரியமங்கலத்தில் உள்ள இந்த குப்பைக் கிடங்கு மாநகரத்திற்கு வெளியில் மாற்றப்படும், அதேபோல் ஆறு ஏரி குளங்கள் தூர்வாரப்படும், ஏரி குளங்கள் தூர்வாரப்படாததால் வயல்களில் தண்ணீர் அப்படித் தேங்கியதால் விவசாய பொருள்கள் சேதம் அடைந்தது. அதிமுக அரசு அதற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. மேலும் பெண்களுக்கும் மக்களுக்கும் எதிரானதாக இந்த ஆட்சி  உள்ளது.

தில்லியில் நம்மை அடமானம் வைத்ததால் தான் நீட் தேர்வு கொண்டுவந்தனர். இதனால் பலர் படிக்க முடியாமல் போனது, தமிழ் நாட்டை மீட்டெடுக்க ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று கூறிவாக்கு சேகரித்தார். திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் கயல்விழி சண்முகம் ஞானதீபம், மற்றும்  உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com