சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.18.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
துவையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். 
அப்போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் தங்கச் சங்கிலி உள்பட 408 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதன் மொத்த மதிப்பு ரூபாய் 18.90 லட்சம் ஆகும். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com