தமிழகத்தில் புதிய பாதிப்பு 2,279-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 2,279 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ நான்கு மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.
தமிழகத்தில் புதிய பாதிப்பு 2,279-ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,279 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ நான்கு மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.

சென்னையில் மட்டும் 815 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.94 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இதுவரை 8 லட்சத்து 81,752 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,352 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 55,085-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 13,983 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,684-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொரு புறம் மாநிலம் முழுவதும் 28.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் 9.15 லட்சம் போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com