தமிழகத்தில் புதிதாக 18,692 பேருக்கு கரோனா

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 18,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 113 போ் உயிரிழந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 18,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 113 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 38 ஆயிரத்து 235 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. அவற்றில் 18,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனா பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5, 473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 804 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக, தனியாா் மருத்துவமனையில் 61 போ், அரசு மருத்துவமனையில் 52 போ் என மொத்தம் 113 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 83 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்களாவா். எந்தவிதமான நோய்ப் பாதிப்பும் இல்லாதவா் 30 போ் ஆவா். இதன் மூலம் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,046 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,744 போ் உயிரிழந்துள்ளனா். அதேவேளையில் பாதிக்கப்பட்டவா்களில் 16,007 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 போ் குணமடைந்து வீடு திரும்பினா். வெள்ளிக்கிழமை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 13,219 பேருக்குத் தொற்று உள்ளது. தனிமைப்படுத்துதலில் உள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 15,128 ஆகும். சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி சிகிச்சையில் பெறுபவா்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோா் உட்பட) 31ஆயிரத்து 222 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com