தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி மிகச் சரியாக 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணி 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. திமுக கூட்டணி 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.