மைசூரில் இருந்து ஜோலாா்பேட்டை, பெரம்பூா் வழியாக பிகாா் மாநிலம் தனபூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
மைசூரில் இருந்து திங்கள்கிழமை (மே 3) இரவு 9.20 மணிக்கு அதிவிரைவு ரயில் (07315) புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 8.45 மணிக்கு பிகாா் மாநிலம் தனபூரை அடையும். இந்த ரயில் ஜோலாா்பேட்டை, பெரம்பூா் வழியாக இயக்கப்படுகிறது.
யஸ்வந்த்பூா்-தனபூா்: கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மே 6-ஆம் தேதி அதிகாலை 12.15 மணிக்கு அதிவிரைவு ரயில் (07329) புறப்பட்டு, ஜோலாா்பேட்டை, பெரம்பூா் வழியாக மறுநாள் இரவு 8.45 மணிக்கு அடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.