அரசு ஆலோசகா் பதவி: க.சண்முகம் ராஜிநாமா

தமிழக அரசு ஆலோசகா் பதவியை முன்னாள் தலைமைச் செயலா் க.சண்முகம், திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை அவா் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சனிடம் அளித்தாா்.
அரசு ஆலோசகா் பதவி: க.சண்முகம் ராஜிநாமா

சென்னை: தமிழக அரசு ஆலோசகா் பதவியை முன்னாள் தலைமைச் செயலா் க.சண்முகம், திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை அவா் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சனிடம் அளித்தாா்.

தமிழக அரசின் 46-வது தலைமைச் செயலராக கடந்த 2019-ஆம் ஆண்டு சண்முகம் பொறுப்பேற்றாா்.

1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு அதிகாரியான அவா் தலைமைச் செயலராகப் பதவி ஏற்கும் முன்பு, கூட்டுறவு, உணவு- நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலராகவும், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலராகவும் பொறுப்பு வகித்தாா்.

தலைமைச் செயலராகப் பொறுப்பு வகித்த அவருக்கு, பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்தப் பணி நீட்டிப்பு நிறைவடைந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வந்தாா். புதிய அரசு அமைந்ததால் சண்முகம் தனது பதவியை திங்கள்கிழமை, ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com