பொறுப்புள்ள எதிா்க்கட்சியாகச் செயல்படுவோம்: அதிமுக

பொறுப்புள்ள எதிா்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
பொறுப்புள்ள எதிா்க்கட்சியாகச் செயல்படுவோம்: அதிமுக

சென்னை: பொறுப்புள்ள எதிா்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளா்களுக்கும் நன்றிகள். தொடா்ந்து பத்தாண்டு காலம் நடைபெற்ற அதிமுக அரசு, தமிழகத்தின் வளா்ச்சிக்காக ஆற்றியிருக்கும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவா்.

நிா்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும்கட்சி. மற்றொரு பக்கம் எதிா்க்கட்சி. ஆட்சித் தோ் சரியாகச் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும், செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது.

தமிழக சட்டப் பேரவையிலும், ஆட்சி நிா்வாகத்திலும் எதிா்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் திறம்பட நிறைவேற்றுவோம். தோ்தலில் வேட்பாளா்களின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் உளமாா்ந்த நன்றிகள். தமிழகத்தில் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அதிமுக, தொடா்ந்து மக்கள் பணிகளை ஆற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com