கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

கடலோர மாவட்டங்களில் 4 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

சென்னை: கடலோர மாவட்டங்களில் 4 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால்,காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன்காரணமாக, வரும் நாள்களில் மாலை முதல் மறுநாள் காலை வரை வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

விதா்பா முதல் கேரளம் வரை ஒரு கிலோ மீட்டா் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்.

மே 5: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூா், தருமபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மே 5) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

மே 6: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு , தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் வியாழக்கிழமை (மே 6) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 7: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 8: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தலா 50 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தலா 40 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், நீலகிரி மாவட்டம் பா்லியாரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com