சிவகாசி அருகே மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு ஆலையில் தீ விபத்து 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கியதில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 
சிவகாசி அருகே மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு ஆலையில் தீ விபத்து 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கியதில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 

சிவகாசி அருகே கீழ பெத்துலு பட்டியில் சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தயாரிப்பு பணி நடைபெறும் இடத்திற்கு தள்ளி உரிய விதிமுறைகளின் கூடிய முடிவடைந்த கம்பி மத்தாப்பூ இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளது.

இந்நிலையில் சிவகாசி பகுதியில் நண்பகல் சுமார் 12 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிடங்கில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கம்பி மத்தாப்பு கல் எரிந்து சாம்பல் ஆனது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் காயமில்லை.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்பி மத்தாப்பு எரிந்து போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் காவல்துறையினர் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் சம்பவ இடத்தை சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com