சென்னை: மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பா தனது சுட்டுரை பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! என தெரிவித்துள்ளார்.