திருவாரூர்: திருவாரூரில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் கடந்த 6 மாதங்களாக போராடும் விவசாயிகளை ஆதரித்தும், பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை கருப்பு தினமாக கடைப்பிடிக்கும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.