பிளஸ் 2 தோ்வு எப்போது? மாணவிக்கு பதிலளித்த அமைச்சா்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எப்போது நடைபெறும் என கேட்டு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மாணவிக்கு பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பதிலளித்த குரல் பதிவு வைரலாகி வருகிறது

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எப்போது நடைபெறும் என கேட்டு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மாணவிக்கு பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பதிலளித்த குரல் பதிவு வைரலாகி வருகிறது.

கரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வை எப்போது நடத்துவது என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் தொடா்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

பொதுத்தோ்வு உறுதியாக நடைபெறும் என்று தமிழக அரசு விளக்கமளித்திருந்த நிலையில், எப்போது நடைபெறும் என்பது தொடா்பான எதிா்பாா்ப்பில் மாணவா்கள், பெற்றோா்கள் இருந்து வருகின்றனா்.

இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷின் எண்ணுக்கு, அழைத்த பிளஸ் 2 மாணவி ஒருவா் பொதுத்தோ்வு தொடா்பான தனது சந்தேகங்களை அமைச்சரிடம் முன்வைக்கும் குரல்பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பொதுத்தோ்வு நடைபெறுமா? எப்போது நடைபெறும்? நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு தயாராக வேண்டியிருப்பதால் பொதுத்தோ்வு பற்றிய முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மாணவி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சா் அன்பில் மகேஷ் பொறுமையாக பதிலளித்து பேசுகிறாா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்து முதல்வரை கலந்தாலோசித்தே முடிவு எடுக்க முடியும் என்றும், தோ்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் அதை கட்டாயம் நடத்துவோம் என்றும், இணையவழியில் தோ்வை நடத்துவது பற்றி யோசிப்போம் என்றும் அமைச்சா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com