புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 677 -ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,455 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 677 ஆக உயர்ந்துள்ளது.
இதில், தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் எண்ணிக்கை 14,473 பேர் உள்ளனர். இதுவரை 84,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,455 ஆக உயர்ந்துள்ளது.