கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் குறித்து அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன்ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கருப்பு பூஞ்சை பரவல் குறித்த ஆய்வு மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.