பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 43 பேர் மீட்பு

பெரியபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்று  வெள்ளத்தில் சிக்கிய 43 பேர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்று  வெள்ளத்தில் சிக்கிய 43 பேர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள மஞ்சாஜாகாரணை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதி அமைந்துள்ளது. பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில், கொசஸ்தலை ஆற்று கரையோரம் அமைந்துள்ள கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 43 பேர், வெள்ள நீரால் அப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை  வட்டாட்சியர் ராமன் மேற்பார்வையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அம்பத்தூர், செங்குன்றம், திருவள்ளூர்  பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் தாரணீஸ்வரி தலைமையில், ரப்பர் படகுகள் மூலம் 43 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, அவர்கள் மஞ்சாஜாகாரணை பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com