ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வெள்ள பாதிப்பு: அமித் ஷாவை சந்தித்து ரூ. 2,079 கோடி நிவாரணம் கோரினார் டி.ஆர்.பாலு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிவாரணம் வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புதன்கிழமை கோரிக்கை வைத்தார்.

News image
வெள்ள பாதிப்பு
Updated On :17 நவம்பர் 2021, 5:34 am

DIN

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிவாரணம் வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புதன்கிழமை கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தில்லி சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.

அப்போது, தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ. 2,079 கோடி தேவை என்றும் முதற்கட்டமாக ரூ. 550 கோடி விடுவிக்க கோரியும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.