தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிவாரணம் வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புதன்கிழமை கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தில்லி சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.
அப்போது, தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ. 2,079 கோடி தேவை என்றும் முதற்கட்டமாக ரூ. 550 கோடி விடுவிக்க கோரியும் வலியுறுத்தினார்.