பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்க வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்க வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் டிவிட்டரில் கூறியிருப்பது:

பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கத்தோடு அதிமுக ஆட்சியில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசுப் பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம்.

ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை. பிறகு கரும்பு சோ்க்கப்பட்டாலும் பரிசுப் பணத்தைக் காணவில்லை.

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com