பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆரணியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.50 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவருடைய தந்தை சிட்டி பாபு இருவரையும் ஹைதராபாத்தில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர்.
பின் அவர்களை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.