வீா் சக்ரா விருது பெற்ற விமானப் படை குரூப் கேப்டன் அபிநந்தன் வா்த்தமானுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போா்க்களத்தில் இருப்பான் என்று புறநூனூற்று பாடல் கூறுகிறது. இந்தப் பாடலை பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வா்த்தமான், வீா் சக்ரா விருது பெற்ற்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.