சென்னை: தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிக்க சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சபரிமலையில் தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிப்பதற்காக, கேரளம் அரசின் ஒத்துழைப்புடன் 2 அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.