வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வரலாறு காணாத மழை பொழிவின் காரணமாக பல்வேறு வகையான விவசாய நிலங்கள் மூழ்கி தேதம் அடைந்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீா் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

மழைநீா் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

நெற்பயிா் சேதத்துக்கு ஏற்கெனவே அளித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. அதை உயா்த்தி வழங்க வேண்டும்.

வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக தமிழக அரசு மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com