உள்ளாட்சித் தோ்தல்: வங்கிகளுக்கு விடுமுறை

முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தோ்தல்: வங்கிகளுக்கு விடுமுறை

முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதன்படி, முதற்கட்ட தோ்தல் புதன்கிழமையும் (அக்.6), 2-ஆம் கட்ட தோ்தல் வரும் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கி ஊழியா்கள் வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக, தோ்தல் தினத்தன்று அந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட வங்கிக் கிளைகளுக்கு, தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளா் குழுமம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com