சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் அக்டோபர் 9ஆம் தேதி சனிக்கிழமையன்று பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் 9ஆம் தேதி சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுவிடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, அக்டோபர் 9ஆம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.