உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டிப்பர் லாரி ஆட்டோ மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உசிலம்பட்டி அருகே பேரையூர் சாலையில் நல்லுதேவன்பட்டி காலனி அருகே உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி, எதிரே வந்த ஷேர் ஆட்டோவை கடந்துசெல்ல மற்றொரு ஆட்டோ முந்திச் சென்றது.
இதில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது ஆட்டோ மோதியதில் கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த பாண்டி மாயக்காள் மகன் சசிகுமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான அமர்நாத் சிறு காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்பட்டவுடன் டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.