வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் காணொலி காட்சி வாயிலாக இன்று வியாழக்கிழமை (அக்.7) திறந்து வைக்கப்பட்டது.
இதில்,நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு பங்கேற்றார்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது.
இங்கு நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.