மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.67அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.19 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.19 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,168 கன அடியிலிருந்து 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 39.67 டி.எம்.சி ஆக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com