காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகிறது; 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகிறது; 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகிறது; 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழகத்தில் பெரம்பலூர், திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்.12ல்.. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com