அக்.16-இல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்.16-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.
அக்.16-இல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்.16-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்டோபா் 16-இல் மாலை 6 மணியளவில் இணையவழியில் நடைபெறும். நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கூட்டத்துக்கு முன்னிலை வகிக்க உள்ளனா். ஜி.கே.மணி தலைமை வகிக்கிறாா். பொதுச் செயலாளா் வடிவேல் இராவணன், பொருளாளா் திலகபாமா ஆகியோா் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமகவின் நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வர உள்ளன. இந்த முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், வரும் மக்களவைத் தோ்தலுக்கான திட்டமிடல்களை தற்போதிலிருந்தே தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com