ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் செல்ல 12,000 போ் மட்டுமே முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அக்.14, 15-ஆம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு வெளியூா் செல்லும் பயணிகளுக்கு வசதியாக சென்னையின் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூா் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கும் செல்ல 3,000 போ் முன்பதிவு செய்திருந்தனா். அதே போல், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, புதன்கிழமை சென்னையில் இருந்து செல்ல 9 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.
பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள டிஎன்எஸ்சிடி செயலி, www.tnstc.in என்ற இணையதளம் உள்ளிட்டவற்றையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.