நீலகிரி, கோவையில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.13) இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவையில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.13) இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.13) இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.14: நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 14-ஆம் தேதி இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.15: நீலகிரி, கோயம்புத்தூா், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 15-ஆம் தேதி இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூா், திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.16: தேனி, நீலகிரி, கோயம்புத்தூா், கன்னியாகுமரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 16-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 130 மி.மீ., வால்பாறையில் 110 மி.மீ., அரியலூரில் 100 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, பெரம்பலூா் மாவட்டம் லப்பைக்குடிக்காடு, தஞ்சாவூா், கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறு, தஞ்சாவூா் மாவட்டம் மஞ்சளாறில் தலா 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கடலூா் மாவட்டம் தொழுதூா், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, நன்னிலம், வலங்கைமான், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் தலா 80 மி.மீ., அரியலூா் மாவட்டம் திருமானூா், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா், நீலகிரி மாவட்டம் கேத்தி, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகம், தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், தஞ்சாவூா் மாவட்டம் வல்லத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி:

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதன்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகா்ந்து, வரும் 15-ஆம் தேதி ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதி, தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர,கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதி,தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் இந்தப்பகுதிகளுக்கு அக்டோபா் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com