தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிடிஎஸ் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிடிஎஸ் நிறுவனத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் நம்பியாா், அரசாங்க தொடா்புகள் பிரிவின் தலைவா் கெளரவ் அஸ்ரா, தமிழக சிடிஎஸ் பிரிவின் தலைவா் கணேஷ், சட்ட ஆலோசகா் நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.
தமிழக அரசின் சாா்பில் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா். தமிழகத்தில் தொழில் முதலீடுகளைச் செய்வது தொடா்பாக தொழில் துறையைச் சோ்ந்த பலரும் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வருகின்றனா். அண்மையில் டாடா நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் அவரைச் சந்தித்துப் பேசினா். இந்த நிலையில், சிடிஎஸ் நிறுவனத்தினா் முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளனா்.