மேட்டூர் அணை நீர்மட்டம் 88.13 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 86.97 அடியிலிருந்து 88.13 அடியாக உயர்ந்தது. 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.13 அடியாக உயர்ந்தது. 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.13 அடியாக உயர்ந்தது. 


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 86.97 அடியிலிருந்து 88.13 அடியாக உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் அளவு சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,373 கன அடியிலிருந்து 15,757 கன அடியாக குறைந்து உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 50.54 டி.எம்.சி ஆக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com