9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: நீலகிரியில் மிக பலத்த மழை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(அக்.16) மிக பலத்த மழையும், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி,
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(அக்.16) மிக பலத்த மழையும், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்குசுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.16) மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.17: மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 17- ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.18, 19: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் மேமாத்தூரில் 70 மி.மீ., வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமயிலூரில் தலா 50 மி.மீ., தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூா், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கலையநல்லூரில் தலா 40 மி.மீ., ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் கிழக்கு அரபிக்கடல், கேரளம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com