வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் கூறியதாவது:

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வியாழக்கிழமை (அக்.28) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஈரோடு மாவட்டம் கோபி), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 40 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாரில் தலா 30 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அக்.28 முதல் 30-ஆம் தேதி வரை, சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அக்.29 முதல் அக்.31-ஆம் தேதி வரை, சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அக்.29 முதல் அக்.31-ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., அவ்வப்போது 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com