சென்னை: இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் விவரங்களைத் திரட்டி அனுப்பி வைக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின், பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் விவரங்களைத் திரட்டும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் விவரங்கள், ஏற்கெனவே படித்துச் சென்ற முன்னாள் மாணவா்களின் விவரங்களை ன்ஞ்ஸ்ரீண்ஸ்ரீ2ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்.15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.