தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,
தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டும் என்ற நிலையில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேவையற்ற சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.