‘மெரினா கடற்கரை அழகுபடுத்தப்படும்’: அமைச்சர் வீ. மெய்யநாதன்

சென்னை மெரினா கடற்கரை ரூ. 20 கோடியில் அழகுபடுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை ரூ. 20 கோடியில் அழகுபடுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று அமைச்சர் வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மெரினா கடற்கரையை ரூ. 20 கோடி செலவில் அழகுபடுத்தப்படும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மரம் நடுவதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 2 கோடி பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை ரூ. 32 கோடியில் நவீனப்படுத்தப்படும். பொங்கல் மற்றும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தமிழகத்திலிருந்து 50 பேர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com