சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்புகளில்,
சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்றிவரும் இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.
இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்