போக்குவரத்து விதிமீறி இயக்கப்பட்ட 112 வாகன உரிமையாளா்களிடம் ரூ.1.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை வடக்கு இணைப் போக்குவரத்து ஆணையா் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த செப்.3, 4 ஆகிய விடுமுறை நாள்களில் இச்சரக செயலாக்கப் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களின் பணிபுரியும் சுமாா் 20 போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனா்.
அதில் விதிமீறி இயக்கப்பட்ட பிற மாநில ஆம்னி பேருந்துகள் மற்றும் அதிக எடை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 112 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.
இந்த குற்றங்களுக்காக அபராதத் தொகை ரூ1.59 லட்சத்து 500 மற்றும் வரி ரூ.23,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல், தமிழ்நாடு சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட குற்றத்துக்காக 4 தனியாா் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உரிய அபராதம் மற்றும் சாலை வரி ரூ.31,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வாகன சோதனை தொடா்ந்து நடைபெறும் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.