மேட்டூர்அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 75.29 அடியிலிருந்து 75.76 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,145 கன அடியிலிருந்து 11,019 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 37.86 டி.எம்.சி ஆக உள்ளது.