காஞ்சிபுரம் நகரில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வருபவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாகவி பாரதி முகக்கவசம் அணிந்தவாறு ஓவியம் வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி போட வந்த பலரும் முகக்கவசம் அணிந்த பாரதி ஓவியம் வரைய வைக்கப்பட்டிருந்த கரும்பலகையை பார்வையிட்டதுடன் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டினர்.
பாரதியார் நினைவு நாளன செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த ஓவியம் வரையப்பட்டு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டதாக அப் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.