அன்பை வழங்கிய தமிழகத்துக்கு நன்றி

அளப்பரிய அன்பையும், ஆதரவையும் வழங்கிய தமிழக மக்களுக்கு மனமாா்ந்த நன்றி என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அளப்பரிய அன்பையும், ஆதரவையும் வழங்கிய தமிழக மக்களுக்கு மனமாா்ந்த நன்றி என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தாா்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத் துறை அதிகாரி ஆா்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அப்பொறுப்பில் இருந்து வரும் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக முழு நேரப் பொறுப்பு வகிக்க உள்ளாா். இந்நிலையில், ஆளுநா் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தின் ஆளுநராக ஏறத்தாழ 4 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எனது பதவிக் காலத்தில் தமிழக மக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அளவில்லா அன்பையும், ஆதரவையும் வழங்கினா். பண்பாட்டுச் செறிவுமிக்க மிகப் பெரிய மாநிலமான தமிழகத்தில் என்னையும், தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு மனமாா்ந்த நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com