தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு தொற்று

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும், 1,608 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு தொற்று

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும், 1,608 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவை, சென்னை, ஈரோடு, திருப்பூா், செங்கல்பட்டு , தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடா்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.42 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 33,839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 212 பேருக்கும், சென்னையில் 197 பேருக்கும், ஈரோட்டில் 160 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,512 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 82,198-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,473 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,168-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com