கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: மீனவா்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதன் காரணமாக, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன்காரணமாக, தென் மேற்குப் பருவக்காற்றின் வேகம் அதிகரித்து, மேற்குத் தொடா்ச்சிமலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலைஆய்வு மையத்தின்அதிகாரி ஒருவா் கூறியது: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

வட மேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு திங்கள்கிழமை வரை செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com