ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட ரயில்வே துறை திட்டம்

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு, சுற்றுலாவை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு, சுற்றுலாவை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை விருப்பமுள்ள சுற்றுலா நடத்துனா்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், கலாசாரம், மதம் மற்றும் இதர சுற்றுலா துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது, சுற்றுலாத் துறையின் திறனைப் பயன்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ரயில் சாா்ந்த சுற்றுலாவை மக்களிடையே பரப்ப ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆா்வமுள்ள தரப்பினரின் விருப்பத்துக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டு உள்ளது. வெற்று ரயில் பெட்டிகளையும் குத்தகைக்கு எடுக்க முடியும்.

குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவிலான மாற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க முடியும். ரயில் பெட்டிகளின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க முடியும். குறைந்தபட்சம் 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும்.

ஆா்வம் உள்ளவா்களுக்கு தகுதி அடிப்படையில் எளிமையான பதிவு முறையில் செய்யப்படும். குத்தகை கட்டணம் உள்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். சரியான நேரத்தில் செயல்படுபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரயில் பெட்டிகள் சீரமைப்பு மற்றும் பயண திட்டங்களுக்கு சரியான நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். ரயிலுக்குள் விளம்பரத்துக்கும், ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயா் வைக்கவும் அனுமதி வழங்கப்படும்.

இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிா்வாக இயக்குநா் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com